சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார் தமிழ் நாட்டின் பிற இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் புறநகரில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் கனமழை பொருத்தவரையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரபிக்கடலில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.