விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி ..! இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி குறித்து சீமான் காட்டம்

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை விலைக்கு வாங்கி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது ஒரு மோசமான போக்கு என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஓட்டிற்கு பணத்தை கொடுப்பது ஒரு மோசமான போக்கு என்றும், இது தொடர்ந்தால் மக்களுக்கு தொண்டாற்றக் கூடிய அரசியல்வாதிகள் எவ்வாறு உருவாவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply