தந்தையை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைக்க முயற்சி செய்த மகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைக்கும்போது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சின்னகள்ளிபட்டி சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாகாளி. இவரின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இந்த தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார் தனியே வசித்து வந்த மகளுக்கும் சிவராஜன் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

 

ஆனால் ஒரு நாள் அதிகமாக இருக்கிறதே கழிக்கின்றனர் மாகாளி நினைத்திருக்க மாட்டார் அக்டோபர் 16ஆம் தேதி தான் அந்த நாளின் கடைசி நாள் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தனது தந்தையை பார்க்க சென்ற சிவராஜ் வழக்கம்போல அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் பெற்ற தந்தையை அடித்துக் கொலை செய்த சிவராஜ் உடலை வீட்டிற்குள்ளேயே புதைப்பதற்காக குழி தோண்டி உள்ளார்.

 

வீட்டிற்குள் இருந்து சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர் அதைக்கண்ட சிவராஜ் மாகாளி உடலை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாகாளியின் உடலை கைப்பற்றியதோடு தலைமறைவாக இருந்த சிவராஜை கண்டுபிடித்து கைது செய்தனர்.


Leave a Reply