செல்பி எடுக்கும்போது ராட்டிணத்தில் இருந்து கீழே விழுந்த பெண்

பீகார் மாநிலத்தில் 100 அடி உயர ராட்சத ராட்டினத்தில் இருந்தபடி செல்பி எடுத்த பின் ஒருவர் கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செல்பி மோகத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன அந்த வகையில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை துர்கா பூஜை கொண்டாடப்பட்டது.

 

அன்றிரவு பூங்காவிற்கு சென்ற பெண்ணொருவர் நூறடி ராட்சத ராட்டினத்தில் ஏறி சுற்றி உள்ளார் அப்போது ராட்டினத்தில் இருந்த படி அந்த பெண் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அந்தப் பெண் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ராட்டினத்தை பிடிக்காமல் விட்டு விடவே மேலிருந்து தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Leave a Reply