பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்திடம் அதி நவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தப்படி முதலாவது விமானம் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படை இடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதை பெற்றுக் கொள்வதற்காக சென்று உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசுகிறார்.
அங்கிருந்து துறைமுக நகருக்கு செல்லும் அவர்கள் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொள்கிறார் என்று தசரா பண்டிகையை கொண்டாட உள்ளதால் அதற்கு ராஜ்நாத்சிங் ஆயுத பூஜை செய்வார் என்றும் பின்னர் போர் விமானத்தில் பறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ராணுவ அமைச்சர் இந்திய விமானப்படை தளபதி இருநாட்டு விமானப்படை மற்றும் நிறுவன அதிகாரிகளின் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
ரஃபேல் ரக முதல் விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்க பட்டாலும் அடுத்த சில மாதங்களிலேயே இருக்கும் அங்கு 24 விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் முதல் தொகுப்பில் வழங்கப்படும் நான்கு விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
இரட்டை எஞ்சின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ராபின் வானிலிருந்து பூமியில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும் இந்த விமானத்தில் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள் தலைமுறை ஏவுகணைகள் ஆகும் குகைக்குள் பதுங்கியிருக்கும் எதிரிகளை அழிக்க கடுமையான பாறையையும் ஊடுருவி தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது சக்திவாய்ந்த போர்க்கருவிகள் ஏவுகணைகளை பொருத்தி பயன்படுத்த ஏற்றது என்பதால் இந்திய ராணுவத்திற்கு இவை வல்லமை வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்துவதற்கான உட்கட்டமைப்புகளை இந்திய விமானப்படை ஏற்கனவே உருவாக்கியுள்ளது விமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் 36 ரபேல் விமானங்களை 18 விமானங்கள் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இந்த தளம் இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மீதமுள்ள 18 விமானங்கள் மேற்குவங்கத்தில் விமானப்படைத் தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில் ரஃபேல் போர் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டமைப்புகள் பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.