விஷ ஊசி போட்டு மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சேர்ந்த உதயராஜ் என்பவர் மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த தனது நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்த அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

 

அவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிகிறது. மாணவரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் உதயராஜ் தற்கொலை முயற்சி செய்து கொண்டதற்கு முன்னர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் காவல்துறை வசம் கிடைத்துள்ளது. அதில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை மேற்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Leave a Reply