நாகை அருகே மதம் மாறிய குடும்பத்தினரை ஊரை விட்டு வெளியேற வற்புறுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இரண்டு மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கோதண்ட ராஜபுரத்தை சேர்ந்த தென்கோவன், வசந்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசந்தி குடும்பத்தார் மதம் மாறியுள்ளனர்.
இந்த நிலையில் கோவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வசந்தியின் வீட்டிற்கு சென்ற சிலர் ஊரை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் மகன்களுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த வசந்தி உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்ட வசந்தி தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் செய்திகள் :
நடிகர் அஷ்வின் படத்திற்கு கிடைத்த படுமோசமான வரவேற்பு..!
நடிகை குஷ்பூ வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
பூஜா ஹெக்டேவின் முன்பு எடுத்த புகைப்படங்கள் வைரல்..!
மணமகன் விக் கழன்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்..!
முஸ்லீம் கடைக்கு சாப்பிட போவாதீங்க என சர்ச்சை கருத்து..!
சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை..!