போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிம்மதியிழக்க செய்து வருகிறது.
அதேபோல் இன்று காலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் போர்ட்பிளேர் உள்ளிட்ட இடங்களில், இன்று காலை 7.24 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் பொதுமக்கள் சற்று பீதியடைந்தனர். சமதள பகுதிக்கு ஓடிவந்து தஞ்சமடைந்தனர். எனினும் அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த பாதிப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
மேலும் செய்திகள் :
வன அழிவை முன்கூட்டியே அறிவிக்கும் அனாவரன் திட்டம் முடக்கம்..!
மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி
மார்ச் 14ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்..!
பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு..!
ஆதிக்க சாதியினர் பாலியல் வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்..!
சர்வதேச மகளிர் தினம்: கருப்பை நோய்கள் குறித்த விழிப்புணர்வு






