போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிம்மதியிழக்க செய்து வருகிறது.
அதேபோல் இன்று காலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் போர்ட்பிளேர் உள்ளிட்ட இடங்களில், இன்று காலை 7.24 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் பொதுமக்கள் சற்று பீதியடைந்தனர். சமதள பகுதிக்கு ஓடிவந்து தஞ்சமடைந்தனர். எனினும் அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த பாதிப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
மேலும் செய்திகள் :
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பிரபல WWE வீரர் காலமானார்
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!