குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 நீளமுள்ள கரு நாகப்பாம்பு..!
கர்நாடகாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 நீளமுள்ள கரு நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார். கிராமத்தில் இறை தேடிகொண்டு 12 அடி நீளம் கொண்ட கரு நாகப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.
இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரை வரவழைத்தனர். பின்னர் பாம்பை பிடித்து சாக்குப்பையில் போடும்போது பாம்பு அவரை கடிக்க முயன்றது. சுதாரித்துக் கொண்டு கையை உடனே எடுத்ததால் பாம்புபிடி வீரர் உயிர் தப்பினார்.






