கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்..!
கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.




