தேனி மற்றும் மதுரையில் பரவலாக மழை..!
மதுரை, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை நகரில் மேல வடக்கு மாசி வீதி சந்திப்பு என பிரதான சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.





