--- --:--:-- --

நாட்டு வெடி குண்டு வீச்சின் பின்னணியில் யார்?

1

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கல்லூரியில் இரு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பு நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் பாட வேளையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

 

ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விசாரிக்கும் போது வேறு மாதிரியாக கூறுகின்றனர். பூண்டு பட்டாசை மொத்தமாக ஒன்று சேர்த்து உருண்டையாக்கி வீசப்பட்டதாக கூறுகிறார்கள். இதனால் கல்லூரியில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா, பட்டாசா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். பாஜக தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

Right Menu Icon