கோவை சிறுமி கொலை வழக்கு – கைதானவருக்கு கால் முறிவு
கோவை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் தப்ப முயன்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சுற்றி 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏதேனும் அவசர நிலை அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.





