அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவாரா ஸ்டாலின்?
தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய நீரை திறந்துவிடாமல் காலம் தாழ்த்தி வரும் கர்நாடக அரசு, பருவமழை குறைவால் தங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறி வருகிறது. மேகதாது அணை கட்டுவது தொடர்பாகவும் கறாராக பேசி வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து இதற்கு எதிர்வினையாக நீர்வளத்துறை அமைச்சரும் அதிகாரிகளுமே பேசி வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசவில்லை. கர்நாடக தரப்பிலோ முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவுக்கு எதிராக ஏன் பேச தயங்குகிறார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் மௌனம் காப்பது சரியல்ல, இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பறி போவதோடு, தமிழ்நாட்டில் உணவு பிரச்சினையையும் ஏற்படுத்தும்.
கூட்டணியில் குழப்பம் வரக்கூடாது என்பதை கர்நாடக காங்கிரஸ் நினைக்கவில்லையே என்றும் ஸ்டாலினை நோக்கி கேள்விகள் எழுகின்றன.இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அனைத்துக் கட்சியை கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் கர்நாடக அரசு திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறது என்ரு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.





