தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திடீர் மின்தடை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆலோசனை நடத்தப்படுகிறது. மின் தேவை, திடீர் மின் தடைக்கான காரணம், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக மின்தடை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.