பிரசவத்திற்கு கர்ப்பிணியை கட்டிலில் தூக்கி சென்ற கிராமத்தினர்..!
பிரசவத்திற்கு உடனடி சிகிச்சை கிடைக்காத நிலை டிஜிட்டல் இந்தியாவில் தொடர்வதற்கு சான்றாக அமைந்துள்ளது சத்தீஸ்கரில் நிகழ்ந்த சம்பவம். ஜாஸ்பூர் பகுதியில் ஜப்லா கிராமத்தில் சாலை வசதியின்றி மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வர வழி இல்லை. எனவே கர்ப்பிணியை கட்டிலில் வைத்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு அந்த பகுதியினர் சுமந்து சென்றனர்.







