திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியின் ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் முறைப்படி தொடங்கியுள்ளது.
11 நாட்கள் நடைபெறும் இந்த ஆடித்திருவிழாவில் தினமும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ள நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தேரோட்டம் வரும் 11ஆம் திருநாளில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.






