சாலையில் சென்ற பெண்ணின் நகையை பறித்து தப்பிய இளைஞர்கள்..!
சென்னை பல்லாவரத்தில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி செயின் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் ஷுவை வைத்து போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 131 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததாகவும் அதன் பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருசக்கர வாகனம் புரசைவாக்கத்திற்கு சென்றதை கண்டுபிடித்ததாகவும் கூறிய போலீசார் அங்கு நேரில் சென்று விசாரித்த பொழுது கல்லூரி மாணவன் ஒருவர் ஒருவரும் சிசிடிவியில் வந்ததை பார்த்து அவரைப் பிடித்த பொழுது அவரும் அவரது நண்பரும் தான் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.





