பேருந்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்..!
தென்காசி அருகே பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது பெண் பயணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தென்காசியில் இருந்து சுரண்டைக்கு இயக்கப்பட்ட பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் கீழப்பாவூர் அருகே இறங்க முற்பட்டபோது தவறி விழுந்தார்.
பின்பக்கத்தில் சக்கரம் ஏறுவதற்குள் சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக நகர்ந்ததால் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தின் பொழுது எந்தவித ஆறுதலும் சொல்லாமல் ஓட்டுநரும் நடத்துனரும் அங்கிருந்து பேருந்து எடுத்துச் சென்று விட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.





