வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் புயல் காரணமாக வருகிற 10ஆம் தேதி வடக்கில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மே 11ஆம் தேதி ஒடிசா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.





