மையான இட பிரச்சனையை தீர்க்க சென்ற காவலர்களை அடித்த பொதுமக்கள்..!
கடலூரில் மையான இட பிரச்சனையை தீர்த்து வைக்க வந்த காவலரை பொதுமக்கள் அடித்து விரட்டியுள்ளனர். கூடலூர் கிராமத்தில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய தனிநபர் அனுமதி மறுத்ததால் சடலத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் உடலை தூக்கிச் சென்றபோது காவல குணசேகரின் கை நழுவி சடலம் குப்புற விழுந்து உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் காவலர் மீது கல்வீசி தாக்கினர்.







