பயணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!
பயணி ஒருவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சார்ஜாவில் இருந்து வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த தகவலை தொடர்ந்து கராச்சி விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்துள்ளனர். ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணி விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியா விமானம் ஒன்று இஸ்லாமாபாத்தில் அவசரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.






