ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாங்கள் அங்கீகரித்த வழித்தடத்தை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் நீரிணையை கடக்காமல் பல்வேறு கப்பல்கள் பின் வாங்கியுள்ளன.