விமான நிலையத்தில் பரபரப்பு.. அதிசய பாம்பு, அரிய பல்லி..!
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பாம்பு உட்பட 47 பாம்புகள் மற்றும் இரண்டு பல்லிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவில் இருந்து விமானத்தில் இவற்றை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த முகமது முகைதீன் என்பவரை கைது செய்த அதிகாரிகள் அந்த உயிரினங்களை மீண்டும் மலேசியா அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.





