சிகிச்சைக்காக வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவரை தாக்கிய மாணவர்கள்..!
கேரள மாநிலம் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய மருத்துவரை மாணவர் கும்பல் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.





