பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி 60 வயது மூதாட்டி உயிரிழப்பு..!
சென்னை அம்பத்தூர் பனிமலையில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். பேருந்தை பின்னோக்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது.
பேருந்தின் பின்புறத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததை கவனிக்காமல் அரசு பேருந்து ஓட்டுனர் செயல்பட்டதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





