பெண்ணின் கை, கால்களை கட்டி தூக்கி சென்ற உறவினர்கள்..!
உத்திரபிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணை கட்டிலோடு கை கால்களை கட்டி அவரது உறவினர்கள் விளைநிலத்தில் தூக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து 37 வயதான பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதனிடைய வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வர மறுத்ததால் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி உறவினர்கள் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பெண்ணின் கணவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






