ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை இறுதி செய்யும் பணியில் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி உள்ளிட் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கும் நிலையில் மார்ச் இரண்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சித்தோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறித்த மாவட்ட தேர்தல் வளர்ச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் மன வளர்ச்சிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த தேர்தலின் பொழுது வாக்கு எண்ணிக்கை நடந்த இடம் என்பதால் முன்னுரிமை அடிப்படையில் தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் இடம் தேர்வு செய்வதில் இறுதி செய்யப்பட்ட பிறகு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





