முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்..!
கொரொனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு திமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டுமென முதல் கடந்த 28ஆம் தேதி அறிக்கை வாயிலாக முதலமைச்சரை கேட்டுக் கொண்டிருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேண்டுகோளை ஏற்று நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.






