மே 2ல் முழு ஊரடங்கு இல்லை – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு..!
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் ஏப்ரல் 20ஆம் தேதி செவ்வாய் கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் தலைமை தேர்தல் அதிகாரி முழு ஊரடங்கு கட்டுபாடுகள் அன்று மட்டும் பொருந்தாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்





