சாத்தான்குளம் சம்பவத்தில் உண்மையை கூறிய மேஜிஸ்திரேட் பாரதிதாசன், பெண் காவலருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமலஹாசன்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றும் அவருடைய தந்தை ஜெயராஜ் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நீதிபதி மற்றும் சாட்சி அளித்த பெண் காவலருக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் இரட்டை கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக்கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் மதுரை உயர் நீதிமன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலரே வரைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.






