சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்..!
சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாற்றம் குறித்து சபாநாயகருக்கு பழனிச்சாமி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஆர் பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிச்சாமி கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் சார்பில் காலை கடிதம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பழனிச்சாமி கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.





