தேனி மாவட்டம் வழியாக சதுரகிரி மலை ஏறக் கட்டுப்பாடு: இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி
தேனி மாவட்டம் வழியாகச் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று (ஆகஸ்ட் 10) முதல் நான்கு நாட்களுக்கு மலையேறக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட உப்புத்துறை, பழைய கருப்பசாமி கோவில் வழியாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இரவு நேர மலைப் பயணம் ஆபத்து என்பதால் பக்தர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




