சட்டப்பேரவையில் கண்ணியத்திற்கு எதிரான சொற்களை உடனே நீக்க வேண்டும்: எ.வ.வேலு பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கு முன்பாக, அவையின் கண்ணியத்திற்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகளைச் சபாநாயகர் அறைக்குக் கொண்டு சென்று ஆலோசித்த பிறகே நீக்கப்படும் நடைமுறை உள்ளது.
ஆனால், தற்போது பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுவதால், கண்ணியத்திற்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகளைச் சபாநாயகர் அவ்வப்போதே ஆலோசித்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ எ.வ.வேலு பேரவையில் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




