சாலையில் உருண்டு புரண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்..!
சென்னை இராயபுரம் பகுதி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான சுகந்தன் சாலையில் உருண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயபுரம் தொகுதியில் ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னத்தில் போட்டியிடும் அவர் பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய பதாகைகளை மக்களிடம் கொடுத்த ஆதரவு திரட்டினார்.
வென்றாலும் தோற்றாலும் தம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வேன் என சுயேச்சை வேட்பாளர் உறுதியளித்துள்ளார்.







