த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம் – ஆளுநரிடம் தி.மு.க புகார்
சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் சந்தித்தனர். த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆளுநரிடம் தி.மு.க புகார் அளித்துள்ளது. குதிரை பேரம், அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தியுள்ளனர்.





