5ஜி சேவையை தொடங்கப்போகும் ஜியோ நிறுவனம்..!
இந்தியாவில் அடுத்த ஆண்டு பிற்பாதியில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் ஜியோவின் 5ஜி சேவைகளை வழங்க தேவையான கட்டமைப்புகளை உள் நாட்டு திறன் கொண்டு உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் தேசிய இந்தியாவிற்கு சார்பாக ஜியோவின் 5ஜி சேவை விளங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






