தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் எனக் கூறிய இபிஎஸ்..!
பால், மின்கட்டண உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு நிலையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என எதிர் கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் பால்விலை உயர்வை கண்டித்தும் கோவையை அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியும் அதிமுகவினர் நடத்திய போராட்டத்தில் பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஒவ்வொன்றாக திமுக அரசு கைவிட்டதாக குற்றம் சாட்டிய பழனிசாமி அரசியல் காழ் புணர்ச்சியால் கோவையில் அரசு புறக்கணிப்பதாக கூறினார்.





