பணத்தை மட்டுமே நம்பி அதிமுக தேர்தலை சந்திப்பதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம்
பணத்தை மட்டுமே நம்பி அதிமுக தேர்தலை சந்திப்பதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணியில் இருந்தாலும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் திமுக செயல்பட்டு வருவதாக கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.





