கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு..!
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா மற்றும் இதய நோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து புதிய வகை கொரோனா பாதிப்புடன் உயிரிழந்தாரா என்பதை கண்டறிகும் வகையில் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





