கொரோனா நோயாளி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். செம்மஞ்சேரியை சேர்ந்த கணேசன் என்ற அந்த இளைஞன் கேளம்பாக்கம் செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது குடும்பத்தில் ஆறு பேருக்கு கொரொனா தொ ற்று உறுதியான தகவல் அறிந்ததையடுத்து ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.







