தேர்தல் நடத்தை விதிகளை மீறிய துரைமுருகன் மீது வழக்குப்பதிவு..!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் கதிர் ஆனந்த் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துரைமுருகனை வரவேற்க சென்ற தொண்டர்கள் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ஊர்வலம் நடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





