அவசியமின்றி சுற்றித் திரிபவர்களை அடையாளம் காணும் புதிய செயலி
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி அவசியமின்றி சுற்றியிருப்பவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை எடுக்க ஸ்மார்ட் காப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் அவசியம் இல்லாமல் நடந்தால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றால் அவர்களின் புகைப்படம் விவரங்கள் வாகன புகைப்படங்கள் செயலியில் பதிவு செய்யப்படும்.
அதற்குப் பிறகும் அவர் வீட்டிற்கு செல்லாமல் சுற்றித் திரிந்தால் மற்றொரு இடத்தில் போலீசாரிடம் மீண்டும் சிக்கும் போது அவரது விபரங்களை போலீசார் மீண்டும் பதிவு செய்ய முற்படும்போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விபரங்கள் காட்டிக்கொடுத்து விடும் என்பதால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.






