காலியாக உள்ள 40 மருத்துவ இடங்கள் – மத்திய அரசுக்கு கோர்டின் அதிரடி உத்தரவு
காலியாக உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நிரப்பப்படாத நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




