பள்ளி மாணவர்கள் மீது மோதிய கார்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு பகுதியில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது மோதியது.
இதில் அந்த மாணவர்கள் சைக்கிள் உடன் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ரபீக், விஜய், சூர்யா ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.





