--- --:--:-- --

த.வெ.க பெண் நிர்வாகிகளை இழிவாகப் பேசிய புகார்: கலாம் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு

7

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவர் ‘அப்துல் கலாம் விஷன் இந்தியா மூமென்ட்’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பொன்ராஜ் விமர்சித்ததாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், த.வெ.க தலைவர் விஜய் அந்த சமயத்தில் பொன்ராஜின் இந்தச் செயலுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாகப் பொன்ராஜ் மீது தற்போது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. த.வெ.க பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இழிவாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

அதன்படி, கடலூர் த.வெ.க எம்.எல்.ஏ ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் நிலையத்தில் பொன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுமட்டுமன்றி, சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் இந்த விவகாரம் தொடர்பாகப் பொன்ராஜ் மீது மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. த.வெ.க பெண் நிர்வாகிகளுக்கு எதிராக அவதூறாகப் பேசிய விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதியப்பட்டிருப்பது தற்பொழுது முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon