சாலையில் சுற்றிய முதலை..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியிலுள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை பிடிபட்டது. நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்கள் சிலர் அந்த பகுதியில் கூடியிருந்த பொழுது முதலை இருந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் முதலையை பிடித்து சென்று சிதம்பரம் அருகே உள்ள ஏரியில் விட்டுள்ளனர்.





