முதல்கட்ட கொரோனா நிவாரண தொகையை பெறாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம்..!
முதல்கட்ட கொரோனா நிவாரண தொகையை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டை பெற தகுதி உடையவர்கள் 2000 ரூபாய் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






