நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி..!
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு அவரது குடும்பத்தினருக்கும் பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொரொனா பரவி வருகிறது. இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர், செந்தில் அவரது மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொது கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






