நடிகை நிக்கி கல்ராணியிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி..!
நடிகை நிக்கி கல்ராணியிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோரமங்களா பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் நிகில் என்பவரின் ஹோட்டலில் கடந்த 2014ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாயை நிக்கிகல்ராணி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறிய நிகில் சொன்னபடி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக நிகில் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் நிக்கிகல் ராணி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






